இலங்கைத் துடுப்பாட்ட அணியும் தமிழரும்
மேலுள்ள படம் இலங்கை அரசு உலகிற்குச் சொல்லி வரும் பிரச்சாரமாகும். அதாவது நாட்டில் ஒரு பிரச்சனையும் இல்லை அனைத்து இனத்தவரும் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ்கின்றார்கள்... ஆகவே ஒன்றாக நாம் வாழலாம்... ஒன்றாக விளையாடலாம்.... ஒன்றாக வெல்லலாம் என்ற இலங்கை அரசின் கூற்றாகும். இவ்வாறு கூறுவதன் மூலம் இலங்கையில் நடப்பது ஒரு விடுதலைப் போராட்டம் அன்று... இது ஓர் பயங்கரவாதப் போராட்டமே என்பதனைக் நிரூபிக்க விளைகின்றார்கள்.
மேலுள்ள படம் (உண்மை நிலவரம்): இவ்வாறு இன அழிப்புகள் இலங்கை அரசினால் நடாத்தப்படும் பொழுது... நாம் எப்படி ஒன்றாய் வாழலாம்?... ஒன்றாக விளையாடலாம்... விளையாடி எப்படி வெல்லலாம் என்பது இதில் தமிழ் மக்களால் கூறப்படும் உண்மைகளாகும்.
விளையாட்டுப் புறக்கணிப்பு ஒரு நாட்டை அது பாராமுகமாக இருக்கும் அதனுடைய அரசியல் விடயங்களில் மாற்றங்கள் செய்யச் செய்வதற்கு மிகவும் உதவக்கூடிய ஒன்று. உலகில் பல இடங்களில் இப்படியான புறக்கணிப்பு நியாயமானதாக இருக்கும்... இருந்தும் உள்ளது. உதாரணம்: தென் ஆபிரிக்கா
போட்டிக்கு அப்பால்: விளையாட்டும் அரசியலும்" (More Than a Game: Sports and Politics by Martin Barry Vinokur) என்ற புத்தகத்தில் மாட்டின் பரி வினோகுர் பின்வருமாறு கூறுகிறார்: "நாடுகள் விளையாட்டின் மூலம் தேசியத்தை வளர்த்து எடுக்கின்றன. விளையாட்டு ஒரு நாட்டின் பரப்புரைக்கான முக்கிய கருவியாகப் பயன்படுகின்றது".
நாம் ஆழ்ந்து நோக்குவோமேயானால் இலங்கை அரசின் பரப்புரைக்கும், பிரச்சாரத்திற்காகவும் இந்தத் துடுப்பாட்ட விளையாட்டு பயன்படுத்தப்படுவது புரியும். ஆகவே, தமிழரால் இலங்கை அணி புறக்கணிக்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும் என்பதை அனைவரும் உணர்வீர்கள்.
0 Comments:
Post a Comment
<< Home