தமிழில்

எனது தமிழ் ஆக்கங்களினை இப் பதிவில் நீங்கள் பார்க்கலாம்... எனது ஏனைய பதிவுகளைப் பார்ப்பதற்கு "View My Complete Profile" இனை அழுத்தி வேண்டிய பதிவினைத் தெரிவு செய்க.

Thursday, May 13, 2010

இடம்பெயர் தமிழன்


பிறந்தாய் வளர்வதற்காக
படித்தாய் பின் நற்பதவிக்காக...
பதவி வந்து
பணமும் வந்துவிட்டால்
சமூகத்தில் நல்ல ஒரு
கெளரவமும் வந்துவிடுமென
உன்னம்மா சொன்னாளாம்...

இளமையில் காதலித்தாய்
அவள் அளகாய் உள்ளாள் என்பதற்காக
பின்பு அவளை மணந்துகொண்டாய்
திருமண வயது வந்துவிட்டது என்பதற்காக
அப்போது தான்
குளந்தை குட்டிகள் பெற்று
சீரோடும் சிறப்போடும் சந்ததிகள் பெருகுமென
உன் சமூகம் சொன்னதாம்...

ஓய்வின்றி உளைத்தாய்
நல் வாழ்வு வாழ்வதற்காய்???!!!
உளைப்பு மட்டும் வாழ்வாகிப் போனது
குடும்ப்த்தாரிடமோ பேச நேரமின்றிப் போனது
ஒருவரிடையே ஒருவர்
புரிந்துணர்வும் குன்றிப் போகவே
மனத் தாங்கல் மட்டுமே
உனக்கு வரவாகிப் போனது
போனது... போனது...
இன்று உன் உடல் நலமும் குன்றிப் போனது...

உளைத்த காசோ
வங்கியை மட்டும் அலங்கரிக்க
உன் மனையாளோ
நகைக்கடைக் கொலுபொம்மையாயிருக்க
நித்திரையின்றி அலைகிறாய்
இன்று இன்னொரு வீடு வாங்குவதற்காய் நீ
சென்றுவிடும் செல்வத்தை மட்டும் தேடி
மனிதத்தை மறந்து விட்டாயடா...
செருக்கனோ நீ என்றால்
சேற்றுப் பன்றியாய் அல்லவா ஆகிவிட்டாய்...
கேள்விகள் கேட்டால்....
இவையெல்லாம் என் பிள்ளைகளுக்காய் - என்று
பீத்துகிறாய் நீ
நிலையற்ற இவ்வுலகில்
மானிடத்தை மறந்த மனிதப் பிணமா நீ

உன் பிள்ளைகளோ
உன் பாசத்தைப் பார்த்திருந்து
ஏமாற்றமாய் இன்று
எங்கேயோ சென்றுவிட
நீ மட்டும் இங்கு
உன் சொத்தைச் சோகமாய்ப் பார்த்தபடி
ஏதுமறியாது பீத்துகிறாய் நீ
உன் கெளரவத்தை மட்டும் கட்டி அணைத்தபடி
அங்காடி நாய்க்கும்
உனக்கும் என்ன வித்தியாசமடா

Friday, January 30, 2009

நீயும் ஒரு விதையாய்….





















நீயும் ஒரு விதையாய்….

முத்துக்குமாரே…
மாசற்ற மைந்தன் நீ…
மறையாது வாழ்வாய் நீ…
எம் நெஞ்சில் நிலையாய் நீ…
பதித்துவிட்டாய் என்றுமே...
எனதருமைச் சகோதரனே…
உன்னை நீ எரித்தது…
சில தமிழரின் மனச்சாட்சிக்கு
நீ வைத்த வெடி…
ஏன் தமிழனுக்கு வந்ததடா
இன்று இந்தக் கதி…
உனது இப் போராட்டமோ…
எமை மெய் சிலிர்க்கச் செய்கிறது...
ஐயோ… எவ்வளவு துடித்திருப்பாய்…
எவ்வளவு கதறியிருப்பாய்…
எமக்கும் வலிதான் அதனாலின்று...
எனினும்...
நீபட்ட வலியுடன் பார்க்கையில்...
சிறு தூசளவு கூட இல்லையது...
உன் செயல் எண்ணி இன்று அழுவதா…
இல்லை பெருமிதமடைவதா என்று தெரியவில்லை….

இரு வேறு உணர்வுகளும் கொந்தளிக்க...
எம் நெஞ்சங்களில் நெருப்பேற்றி நீ சென்று விட்டாய்
தமிழர் நாம் ஒன்றிணைந்தால்
தரணியில் தமிழர் ஏன் ஏதிலியாய் அலையவேண்டும்
இன்றே… இப்பொழுதே உறுதி கொள்வோம்…
உன் இறுதிக் கிரியை முடியு முன்னர்…
நாம் எழுந்து நிற்போம்….
இன்றாவது எமக்காகவாய்…

யாதும் ஊரே… யாவருங் கேளீர்…
அன்பே என்கள் உலக தத்துவம்…
இன்று… யாதும் எமக்கூராய்…
ஆனால் யாருக்கும் வேணடா அகதிகளாய் நாம்…
யாரிங்கு எமக்குக் கேளீர்?
நாமே எமக்கெதிரியாய்…
நாமே எம்மை காட்டிக்கொடுப்பவராய்...
ஏனிந்தக் கதி எமக்கு…
நீயன்று… உனை எரிக்கவில்லை
உன்னை விதைத்துவிட்டாய்
ஒரு விதையாய்…