தமிழில்

எனது தமிழ் ஆக்கங்களினை இப் பதிவில் நீங்கள் பார்க்கலாம்... எனது ஏனைய பதிவுகளைப் பார்ப்பதற்கு "View My Complete Profile" இனை அழுத்தி வேண்டிய பதிவினைத் தெரிவு செய்க.

Thursday, May 03, 2007

பைபிளில்....

"இதுவே ஆண்டவர் நமக்குக் கூறுகிறார்: 'இதோ, நான் ஈழத்தின் நாணை அறுத்து விடுகிறேன். நான் நான்கு பக்கங்களாலும், நான்கு வகையான காற்றினைத் தேவலோகத்தின் கால்வாசிப் பகுதியினின்று கொணர்ந்து... ஈழத்திற்கு எதிராக அனுப்பி, அங்கு இருப்பவர்களை அல்லோலப் படுத்துவேன்; இங்கு உலகில் ஈழத்தவன் சென்று தஞ்சமடையா நாடே இருக்காது. நான் அவர்கட்கு அழிவினைக் கொடுத்து அவர்களின் அனைத்தினையும் எடுத்துக் கொள்வேன்' என்று ஜேசு பிரான் கூறுகிறார். 'நான் அங்கு எனது ஆட்சியினை ஏற்படுத்தி, ஈழத்து மன்னனை அவனது ஆட் பரிவாரங்களுடன் அழித்தொழிப்பேன். ஆனாலும் நான் மீண்டும் ஈழத்தினர்க்குச் சுகத்தினை வளங்கி நல்லவற்றை வளங்கும் நாளினையும் ஏற்படுத்திக் கொடுப்பேன்" என்று ஆண்டவர் கூறுகிறார்." ஜெரெமயா 49:35-39

இன்கு ஈழம் என எழுதி இருப்பதனை, ஆங்கில பைபிளில் 'Elam' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இது நமது ஈழமா அல்லது முற் காலத்தில் ஈழம் (Elam) என்று அழைக்கப்பட்ட இன்னும் ஒரு நாடா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் எதனை இறைவன் பைபிளில் கூறி உள்ளாரோ அது அப்படியே ஈழத்தில் நடக்கின்றது. என்றாவது ஒரு நாள் நமக்கெல்லாம் விடிவு வந்து, நாம் எல்லம் எமது தாய் நாடு சென்று நின்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்வோமென்று எண்ணுகின்றேன்.

ஆங்கில பைபிளில் எப்படி உள்ளது என்று பார்க்க:
“This is what the Lord Almighty says: ‘See, I will break the bow of Elam, the mainstay of their might. I will bring against Elam the four winds from the four quarters of the heavens; I will scatter them to the four winds, and there will not be a nation where Elam’s exiles do not go. I will shatter Elam before their foes, before those who seek their lives; I will bring disaster upon them, even my fierce anger,” declares the Lord. “I will pursue them with the sword until I have made an end of them. I will set my throne in Elam and destroy her king and officials,” declares the Lord. “Yet I will restore the fortunes of Elam in days to come,” declares the Lord.” Jeremiah 49:35-39

2 Comments:

At 6:13 AM, Anonymous Anonymous said...

அது எலம் ஆகும். எலம் என்பது எகிப்தில் உள்ள ஒரு நாடு. அதற்கும் ஈழத்திற்கும் சம்பந்தமில்லை.

 
At 6:18 AM, Blogger Haran said...

நன்றி உங்கள் தகவலுக்கு...
எனது நண்பர் ஒருவர், Elam பழைய மொசப்பத்தேனியாவில்... ஈரான்.. ஈராக் இல் இருந்ததாகக் கூறியதாக ஞாபகம்...

 

Post a Comment

<< Home