தமிழில்

எனது தமிழ் ஆக்கங்களினை இப் பதிவில் நீங்கள் பார்க்கலாம்... எனது ஏனைய பதிவுகளைப் பார்ப்பதற்கு "View My Complete Profile" இனை அழுத்தி வேண்டிய பதிவினைத் தெரிவு செய்க.

Monday, November 03, 2008

நடிகர்களின் உண்ணாநிலைப்போராட்டத்தின் பொழுது விநியோகிக்கப்பட்ட துண்டறிக்கை இத்துண்டறிக்கையை விநியோகம் செய்தவர் 15 நாள் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்

நடிகர்களின் உண்ணாநிலைப்போராட்டத்தின் பொழுது விநியோகிக்கப்பட்ட துண்டறிக்கை இத்துண்டறிக்கையை விநியோகம் செய்தவர் 15 நாள் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது ஒரு செய்தித் தளத்தில் நான் படித்த விடயம், இதில் இந்தத் துண்டுப் பிரசுரத்தை வழங்கியவர்களின் இங்கிதம் (அவர்கள் பாவித்த வார்த்தைகள், மற்றும் மதிப்பற்ற சொல் வழக்குகள்) எனக்குப் பிடிக்கவில்லை, ஆயினும் அவர்கள் மன உழைச்சலை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

பேராய (காங்கிரசு)க் கட்சியின் தமிழினத் துரோகம்தமிழ் நாட்டுப் பேராய (காங்கிரசு)க் கட்சி கொத்தடிமைக் குக்கல்களின் கூடாரம், அரிமாத் தமிழன் செண்பகராமன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், தமிழ்ப்பெரியார் திரு.வி.க.தில்லையாடி வள்ளியம்மை, திருப்பூர் குமரன், மாவீரன் சுந்தரலிங்கம், மானங்ககாத்த மருது பாண்டியர், நெற்கட்டான் செவ்வல் புலித்தேவன் போன்ற ஒப்புயர்வற்ற ஈகச் செம்மலகளைப் பெற்ற நாடுதான் நம் தமிழ்நாடு! ஆனால் இன்றைய பேராயக் கட்சி (காங்கிரசுக் கட்சி)யோ உத்தரப் பிரதேசத்துக் கொத்தடிமைக் குக்கல்களின் கூடாரமாகிவிட்டது. தமிழ்நாட்டுப் பேராயக் கட்சிக்காரன் எவனுக்குமே தாய்மொழியாகிய தமிழ்மொழி மீதோ, தமிழ்நாட்டின் மீதோ, தமிழினத்தின் மீதோ பற்றுதலே இல்லை! பேராயக் கட்சிப் பேடித் தலைவர்களின் அறியாமையாலும் அடிமைத்தனத்தாலும் தான் நாம் நமது வளமான நிலங்கள் பலவற்றைத் தெலுங்கர்களிடமும், கன்னடர்களிடமும், மலையாளிகளிடமும் இழந்தோம்!உயர்தனிச் செம்மொழியாகிய தமிழ் மொழி கொலுவீற்றிருக்கவேண்டிய இடத்தில் சவமொழி கோலோச்சுவதற்குப் பேராய கட்சிகாரர்களே மூல முதல்வர்கள். இலங்கையின் மலையகத் தமிழர்கள் 15 இலக்கம் பேர் நாடற்றவர்களாக ஆக்கப் பட்டதற்கு நேரு முதல் இந்திரா வரையிலான பேராயக் கட்சிக்காரர்களே பொறுப்பாளிகள். உலகின் முதலாவது கடலோடி இனமான தமிழினம் கச்சத் தீவின் கடற் பரப்பிலே சுட்டுக் கொல்லப்படுவதற்கும் பேராயக் கட்சியின் ஆட்சியாளர்களே பொறுப்பாளிகள்! பாலக்காட்டானான எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன், ஏ.கே. அந்தோணி போன்றவர்களின் தவறான ஏடல்களால்தான். இந்தியாவிலிருந்து ஏராளமான ஆயுதங்கள் சிங்களவர்களுக்கு அனுப்பப்படுகின்றன. தமிழர்களை இனப் படுகொலை செய்யப் பவுத்த சிங்கள வெறியர்களுக்குப் படைப்பயிற்சி தரப்படுவதற்கும் இவர்களே ஏடலர்கள்(ஆலோசகர்கள்). அரசியல் ஓர் இழவும் தெரியாத வானூர்திவலவனான ராசீவ் காந்திக்குத் தவறான வழிகளைக் காட்டி அமைதிப்படை என்னும் பெயரிலே அடாவடிப் பீடைகளை அனுப்பிவைத்த ஆரியப் பார்ப்பனக் கும்பல்தான் இந்திய வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கின்றது. அந்தக் கும்பலின் ஏடலர் (ஆலோசகர்) சிங்களர்களால் லங்காரத்னா என்று போற்றப்படும் இந்துராம் என்கிற ஆரியப் பார்ப்பன ஜயங்காரே! இரவு பகல் வேற்றுமைகள் தெரியாது இருபத்திநாலு மணி நேரமும் கொள்ளையடிப்பதைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த சீரங்கப் பட்டணத்து வந்தேறியான செயலலிதாவும், இந்து-ராமும்,துக்ளக்-சோவும்,சுப்பிரமணியம் சுவாமி என்கிற பன்னாட்டு அரசியல் தரகு மாமாவும் என்ன சொல்லுவார்களோ என்கிற அச்சத்தால் தாறுமாறான முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கும் பஞ்சத்து இந்தியனும், பரம்பரைத் திரிவடுகனுமான கலைஞர் கருணாநிதியும் தமிழீழ மக்களின் இனப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தி விடுவார்கள் என்று அப்பாவித் தமிழர்கள் நம்பி நம்பி ஏமாந்துவிடக்கூடாது.

தமிழ் தேசிய உணர்வாளர்கள் ஓரணியில் திரளவேண்டும்!
ஈழத் தமிழர்களின் விடியலுக்குத் தமிழீழ விடுதலை மட்டுமே தீர்வு! தமிழீழ விடுதலையை வென்றெடுக்கத் தளபதி பிரபாகரன் அவர்களின் கரங்களை வலுப் படுத்துவதே சரியான வழி! அந்த வழியில் புரட்சித் தலைவரும் பொன்மனச் செம்மலுமான ம-கோ-ரா என்கிற எம்.ஜி.ஆர் அவர்களின் வழியில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தரத் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் ஓரணியில் திரளவேண்டும். ம்-கோ-ரா என்கிற எம்.ஜி.ஆர் அவர்களின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் செயலலிதாவை மட்டும் தனிமைப் படுத்திவிட்டுத் தமிழ்த்தேசிய உணர்வாளர்களின் அணியில் இணையவேண்டும்! தமிழ் நாட்டில் மாணவர்களாலும், மீனவர்களாலும், பாட்டாளிகளாலும்,படைப்பாளிகளாலும் முன்னெடுக்கப்பட்டு விட்டிருக்கும் தமிழீழ விடுதலைக்கான ஆதரவுப் போராட்டம் வெல்லவேண்டும்! இருபத்தோராம் நூற்றாண்டு தமிழர்களின் நூற்றாண்டு!
இராசீவ் தலைக்குத்தான் குறி வைத்தேன்;ரோகன விசயமுனி பகிரங்க வாக்குமூலம்

ராசீவ் கொலையில் அவிழ்க்கப்பட வேண்டிய புதிரான முடிச்சுகள்...
கொடுங்கையூரில் ராசீவின் சிலை உடைக்கப்பட்டு விட்டது என்று தரையில் விழுந்து உருண்டு புரண்டு நீலிக் கண்ணீர் வடிக்கும் போலிகளான காங்கிரசுக்கட்சிப் பதடிகளே!....
இந்த வினாக்களுக்கு விடை கூறுங்கள்...
(1) திருப்பெரும்புதூரிலே ராசீவு கொல்லப்பட்டபோது உங்களில் யாருமே அங்கே சென்று சாகவில்லையே ஏன்?
(2) தோழமைக் கட்சிக்காரியான செயலலிதாவை அந்தக் கூட்டத்திலே கலந்துகொள்ள விடாதபடி தடுத்து அறிவுரை வழங்கியது யார்? ஏன்?
(3) ராசீவு கொலை செய்யப்பட்ட நாளில் மாமல்லபுடத்தில் இருந்த சுப்பிரமணியம் சுவாமி "நான் டில்லியிலே இருக்கிறேன்" .. என்று புளுகியது ஏன்?
(4) இரவு 11 மணிக்கு ராசீவு சாகபோகிற செய்தி மாலை 5 மணிக்கே சந்திராசாமிக்கு எப்படித் தெரிந்தது? "ஒழிந்தான் ராசீவு" என்று ஓங்கி முழங்கியபடியே கப்பல் விருந்திலே ஆயுதத் தரகர்களுடன் கும்மாளமிட்ட சந்திராசாமியை யாருமே நெருங்காமல் விட்டு விட்டது ஏன்?(5) நரி மூஞ்சி - நரசிம்மராவின் அலுவலகத்திலிருந்து சந்திராசாமி பற்றிய கோப்புகள் மாயமாய் மறைந்தபோது எந்தப் பேராய கட்சிப் பேடிகளுமே பேச்சு மூச்சு விடாமல் இருந்தது எதற்காக?
(6) ராசீவைத் தீர்த்துக்கட்டச் சீக்கியர் குழுக்கள் ஒரு புறமும், அமெரிக்க உளவு நிறுவனம் மறுபுறமும் சதி செய்து கொண்டிருப்பதாக ராசீவு கொலைக்கு 10 நாட்களுக்கு முன்பே யாசர் அராபத் எச்சரிக்கை செய்திருந்தபோதும் தமிழினத்தின் கருங்காலி யான கார்திகேயன் புலிகளை மட்டுமே நடுவப்படுத்திப் புலனாய்வு செய்தது எதற்காக?
(7) தஞ்சைப் பண்ணையார் கோடியக்கரை - சண்முகம், சந்திராசாமியின் உதவியாளர் பப்லு, அதிகாரி சிறீவத்சவா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணி என்ன?
(8) இராசீவின் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க நாங்களும் உதவுகிறோம். என்று விடுதலைப் புலிகள் இயக்கம் வேண்டுகோள் விடுத்ததே, அந்த வேண்டுகோள் எதற்காக புறக்கணிக்கப்பட்டது?
(9) இராசீவு கொலை வழக்கு மூடிய கதவுகளுக்குள் மட்டுமே நடத்தி முடிக்கப்பட்டது எதனால்?
(10) மாவீரன் சிவராசனை உயிருடன் பிடிக்க அதிரடி வீரர்கள் தில்லியிலிருந்து புறப்பட்டு வருவது தெரிந்தவுடன் அதிரடியாக செயல்பட்டுச் சிவராசனைச் சாகடித்தது எதற்காக?
(11) புலனாய்வு செய்த புடலங்காய்களிடம் சந்திராசாமியைப் பற்றி பேச வாய் திறந்தாலே சாமியைப் பற்றி மட்டும் பேசாதே என்று சீறிச் சீறி அடித்து நொறுங்கியது எதற்காக?
(12) சந்தரா சாமி ராசீவ்வைக் கொலை செய்ய இசுரேல் கூலிப் படைகளுக்கு மூன்று கோடி கொடுத்தார் என்ற கமுகத்தை தில்லி அமைச்சர் ஆரிப்கான் சொன்ன போதே ஏன் உசாவவில்லை.
(13) ராசீவ் கொலை பற்றிய புலனாய்வு ஆவணங்கள் வெளிநாட்டிலே கொத்துக்கொத்தாகப் பறிபோனதன் பின்னணி என்ன?
-மூளையை மழுங்கடித்துக் கொண்டுள்ள காங்கிரசுக்கட்சி முண்டங்களே விடை கூறுங்கள்...

தமிழே உலகின் முதன்மொழி! தமிழனே முதலாவது கடலோடிதமிழ் ஈழம் தமிழினத்தின் பிறப்புரிமை!
50 ஆயிரம் ஆண்டுக்கால இலக்கிய வரலாறு கொண்ட தமிழே உலகின் முதன் மொழி! குமரிக் கண்டமே தமிழனின் பிறந்தகம். கடலில் மூழ்கிய குமரி நிலத்தின் எச்சமே இன்றைய தமிழீழம்! சிங்களவர்கள் இலங்கைத் தீவின் வந்தேறிகள். சேர, சோழ,பாண்டியர் எனும் மூவேந்தர் ஆட்சிகளும் வீழ்ச்சியுற்ற பின்னர் தமிழினம் பலவேறு வந்தேறிகளிடம் மாறி மாறி அடிமைப் பட்டது. ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழினத்தை ஈடேற்றி மேடேற்ற வந்த எழுஞாயிறு, விடிவெள்ளி, தமிழீழத்தின் தேசியத் தலைவரான எல்லாளன் என்கிற பிரபாகரனே!

0 Comments:

Post a Comment

<< Home