தமிழில்

எனது தமிழ் ஆக்கங்களினை இப் பதிவில் நீங்கள் பார்க்கலாம்... எனது ஏனைய பதிவுகளைப் பார்ப்பதற்கு "View My Complete Profile" இனை அழுத்தி வேண்டிய பதிவினைத் தெரிவு செய்க.

Friday, January 30, 2009

நீயும் ஒரு விதையாய்….





















நீயும் ஒரு விதையாய்….

முத்துக்குமாரே…
மாசற்ற மைந்தன் நீ…
மறையாது வாழ்வாய் நீ…
எம் நெஞ்சில் நிலையாய் நீ…
பதித்துவிட்டாய் என்றுமே...
எனதருமைச் சகோதரனே…
உன்னை நீ எரித்தது…
சில தமிழரின் மனச்சாட்சிக்கு
நீ வைத்த வெடி…
ஏன் தமிழனுக்கு வந்ததடா
இன்று இந்தக் கதி…
உனது இப் போராட்டமோ…
எமை மெய் சிலிர்க்கச் செய்கிறது...
ஐயோ… எவ்வளவு துடித்திருப்பாய்…
எவ்வளவு கதறியிருப்பாய்…
எமக்கும் வலிதான் அதனாலின்று...
எனினும்...
நீபட்ட வலியுடன் பார்க்கையில்...
சிறு தூசளவு கூட இல்லையது...
உன் செயல் எண்ணி இன்று அழுவதா…
இல்லை பெருமிதமடைவதா என்று தெரியவில்லை….

இரு வேறு உணர்வுகளும் கொந்தளிக்க...
எம் நெஞ்சங்களில் நெருப்பேற்றி நீ சென்று விட்டாய்
தமிழர் நாம் ஒன்றிணைந்தால்
தரணியில் தமிழர் ஏன் ஏதிலியாய் அலையவேண்டும்
இன்றே… இப்பொழுதே உறுதி கொள்வோம்…
உன் இறுதிக் கிரியை முடியு முன்னர்…
நாம் எழுந்து நிற்போம்….
இன்றாவது எமக்காகவாய்…

யாதும் ஊரே… யாவருங் கேளீர்…
அன்பே என்கள் உலக தத்துவம்…
இன்று… யாதும் எமக்கூராய்…
ஆனால் யாருக்கும் வேணடா அகதிகளாய் நாம்…
யாரிங்கு எமக்குக் கேளீர்?
நாமே எமக்கெதிரியாய்…
நாமே எம்மை காட்டிக்கொடுப்பவராய்...
ஏனிந்தக் கதி எமக்கு…
நீயன்று… உனை எரிக்கவில்லை
உன்னை விதைத்துவிட்டாய்
ஒரு விதையாய்…

Sunday, January 25, 2009

வன்னியிலிருந்து....

இந்த இணையத்தளத்தில் உள்ள (Video) படத்தினைப் பார்க்கவும்... அண்மையில் வன்னியில் இருந்து வெளிவந்த ஒரு நேரடியான அனுபவத்தை ஒருவர் வீடியோவாக எடுத்து அனுப்பியுள்ளார்...

http://www.ireport.com/docs/DOC-200413

Friday, January 02, 2009

எழு தமிழா....

எழு தமிழா...

தூங்காத விழிகளுடன்…
ஏங்குகின்றேன் விடியலுக்காய்
துயிலாத மனதுடனே
துடியாய்த் துடிக்கின்றேன்…

என்னண்ணன் ஈழம் வென்றிடுவான்
விடுதலையைத் தந்திடுவான்

எனினும்…
எம்மக்கள் துன்பங்கண்டு
என்னடா வாழ்க்கையிது என்று
என்மனமோ விம்மிடுதே…

எடுத்து எடுத்து நடும் மரமாய்
வேரை விட்டு வளர முடியவில்லை
செவிடன் காதில் சங்காய்
வெளி நாடுகளோ எம் குரலைக் கேட்கவில்லை
நாம் என்ன செய்வோம் இத் தரணியில்
என்று பார்த்தால்….
நமக்கு நாம் முதலில் கை கொடுத்துத்
தூக்கிவிடப் பார்க்க வேண்டும்…
மற்றவன் எதற்காய் வரவேண்டும்
உற்றான் என்று நாமிருக்கையில்
நாம் என்ன செத்தா போய்விட்டோம்…
ஒன்றிணையுங்கள் உறவுகளே…
தாய் நாடு எமது…
இன்று நீங்கள் வாய்ப் பேச்சுடன் மட்டும்
நில்லாது விடின்…
வெளி நாடுகளும் எம்பின் வரும் நிலை வரும்
இன்று கண்மூடி காது பொத்தி இருப்போர்
இனி கெஞ்சிக் கெஞ்சி எம்பின்னால் வரும் நிலையை
நாமே உருவாக்குவோம்…

எவ்வளவு காலம்தான்
மற்றவர்களின் உதவிக்காய்
உரத்து பறையடிப்பது?
நமக்கென்ன கை கால்கள் இல்லையா?
இல்லை நாம் ஊனமுற்றவரா?
எழு தமிழா… எழு…..
நாமே இன்று எமக்காய்
சுதந்திரம் படைத்திடுவோம்…